Wednesday, 16 May 2018

தந்தையுமானவன்

அமரர் பாலகுமாரன் அய்யா,

ஊர் விட்டு ஊர் செல்வதற்கே

சொல்லிவிட்டு போக வேண்டும்

யெனப் பயிற்றுத் தந்த தந்தைக்கு

நிகரானவர் நீர்.


வயதும் மூப்பும் வளருதல் கண்டு

களிக்க வேண்டிய வயதில்

எல்லோரும் அஞ்சியழும்

இயற்கையை தயாராயிருந்து

எதிர்கொண்டீர். மற்றவருக்கு

வேண்டுமானால், உம் மரணம்

அதிர்ச்சியளிக்கலாம். ஆனால்

உமக்கோ அது எதிர்பார்த்துக்

காத்திருந்து பெற்ற பெரும்

விடுதலை.


இனி யெந்த தேடலுமில்லை.

உடலால் எந்த உபாதையுமில்லை.

இளைப்பாறும்.

இனியெல்லாம் சுகமே.